மஹிந்தவின் சகாக்களுக்கு எதிரான ஜே.வி.பி யின் முறைப்பாடு பதிவாகியது.
https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_68.html
ஜே.வி.பி யினர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மா நாட்டில் தெரிவித்தது போலவே மஹிந்தவின் குடும்பத்தினருக்கும் அவரது சகாக்களுக்குமிடையிலான முறைப்பாட்டினை இன்று லஞ்ச ஊழல் விசாரணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால், ஜொன்ஸ்டன் பெர்னான்டோ, ரோஹித அபேகுணவர்தன போன்றவர்கள் மீதும் அரச நிறுவனங்கள் தொடர்புடையவர்கள் மீதும் இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் வெளி நாடு செல்ல முடியாதாவாறு தடையுத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.