உயர்தர பரீட்சைக்குச் சென்று கொண்டிருந்த 19 வயதான மாணவி ரயில் மோதி மரணம்

கண்­டி­யி­லி­ருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலால் பாட­சாலை மாணவி ஒருவர் மோதப்­பட்டு உயி­ரி­ழந்­துள்­ள­தாக தல­வாக்­கலை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்தச் சம்­பவம் நேற்றுக் காலை 9.35 மணி­ய­ளவில் தல­வாக்­கலை வட்­ட­கொடை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அண்­மித்­தான பகு­தியில் ஹெலிரூட் பகு­தியில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

நேற்­றைய தினம் 12.30 மணிக்கு இடம்­பெ­ற­வி­ருந்த புவி­யியல் உயர் தர பரீட்­சைக்கு தோற்­று­வ­தற்­காக வீட்­டி­லி­ருந்து 7.30 மணிக்கு பாட­சாலை சீரு­டை­யுடன் தல­வாக்­க­லைக்கு இந்த மாணவி வந்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
இந்த மாணவி ரயிலில் மோதி­ய­போது படுங்­கா­யத்­திற்­குள்­ளா­கி­யுள்ளார்.

இதன் பின்னர் ரயிலின் சார­திகள் அவரை நானு­ஓயா புகை­யி­ரத நிலை­யத்­திற்கு கொண்டு சென்­றுள்­ளனர். இதன்­போது நானு­ஓயா புகை­யி­ரத நிலைய அதி­கா­ரிகள் குறித்த மாண­வியை நுவ­ரெ­லியா மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு அனு­ம­தித்­த­போது மாணவி உயி­ரி­ழந்­துள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

இவ்­வாறு உயி­ரி­ழந்த மாணவி திம்­புள்ள பத்­தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தை சேர்ந்த வெள்ளசாமி பிரியா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related

உள் நாடு 2405584264866270516

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item