கரவனெல்ல வைத்தியசாலையில் இன்று பெண் ஒருவருக்கு ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. அவிஸ்ஸாவெல நாபாவெல பிரதேசத்தைச் சேர்ந்த ரேனுகா பிரேமலதா என்ற 31 வயது தாயே இவ்வாறு மூன்று பிள்ளைகளைப் பிரசவித்தார்.
அவரது இரண்டாவது பிரசவத்திலேயே அவர் இவ்வாறு ஒரு ஆண் பிள்ளையையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் பிரசவித்துள்ளார்.