கோத்தபாயவை அரசியலுக்கு அழைக்க தீர்மானிக்கவில்லை – ஜனாதிபதி

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_54.html
அரசியலில் பிரவேசிக்குமாறு கடந்த தடவை நான் விடுத்த கோரிக்கையை கோத்தபாய நிராகரித்திருந்தார்.
கோத்தபாய ராஜபக்ச ஓர் சிறந்த திறமையான பாதுகாப்புச் செயலாளராகும்.
அரசியலில் மட்டுமன்றி அமைச்சு செயலாளர் பதவிகளிலும் திறமையானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
இதனால் கோத்தபாயவை மீளவும் அரசியலில் ஈடுபடுமாறு நான் அழைக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.