வாரியபொல யுவதிக்கு பிணை: வழக்கு ஒத்திவைப்பு
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_650.html
வாரியபொலவில் இளைஞர் ஒருவரை அறைந்ததாக கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதி, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கை செப்டெம்பர் 23 ஆம் திகதிக்கு பதில் நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
குறித்த யுவதி, வாரியபொல பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணியுடன் நேற்று சரணடைந்த நிலையிலேயே பொலிஸார் அவரை கைது செய்து வாரியபொல நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். அதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான இளைஞனுக்கு காதொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.