பிரித்தானியாவை அச்சுறுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள்
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_798.html
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் அச்சுறுத்தல் பிரித்தானியாவையும் ஆட்கொண்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை செயலாளர் தெரேசா மேய் தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக, இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த நாடுகளில் இயங்கும் ஐ.எஸ் குழுக்களுடன் பிரித்தானியாவைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து செயற்படுகின்றனர்.
மேலும் பிரித்தானியாவில் இருந்து தங்களின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் பிரித்தானியாவில் உள்ள சில முஸ்லிம்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரித்தானியாவின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.