கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி
https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_9.html
சம்பியன் லீக் தொடரின் முதற்ப் போட்டியில் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் டோனி 35 ஓட்டங்களையும், ப்ராவோ ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பியூஸ் சவ்லா 2 விக்கெட்களை கைப்பற்றிய அதேவேளை சுனில் நரையன் 4 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து தோல்வியை நோக்கி சென்ற போதும் அன்றே ரஸ்ஸலின் சிறந்த அதிரடி துடுப்பாட்டம் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. 19 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்றது. இதில் அன்றே ரஸ்ஸல் 25 பந்துகளில் 58 ஓட்டங்களையும், ரயன் டென் டொஸ்காட் ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களையும் பெற்றனர். ஆஷிஷ் நெஹ்ரா 4 விக்கெட்களைக் பந்துவீச்சில் கைப்பற்றிக் கொண்டார்.