கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

சம்பியன் லீக் தொடரின் முதற்ப் போட்டியில் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் டோனி 35 ஓட்டங்களையும், ப்ராவோ ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பியூஸ் சவ்லா 2 விக்கெட்களை கைப்பற்றிய அதேவேளை சுனில் நரையன் 4 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து தோல்வியை நோக்கி சென்ற போதும் அன்றே ரஸ்ஸலின் சிறந்த அதிரடி துடுப்பாட்டம் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. 19 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்றது. இதில் அன்றே ரஸ்ஸல் 25 பந்துகளில் 58 ஓட்டங்களையும், ரயன் டென் டொஸ்காட் ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களையும் பெற்றனர். ஆஷிஷ் நெஹ்ரா 4 விக்கெட்களைக் பந்துவீச்சில் கைப்பற்றிக் கொண்டார்.

Related

Sports 9026403004944711679

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item