இராஜதந்திர நிகழ்வின் போது கிழிந்த காலணியுடன் வந்து தடுமாறிய அமைச்சர்
https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_55.html
2013ம் ஆண்டைக் காட்டிலும் இலங்கையின் காலணி ஏற்றுமதி உற்பத்தி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் அறிவித்த இரண்டு நாட்களில் இலங்கையில் கலாசார அமைச்சர் டி பி ஏக்கநாயக்க, இராஜதந்திரிகள் நிகழ்வு ஒன்றின் போது கிழிந்த காலணி ஒன்றை அணிந்து வந்துள்ளார்.
சீன ஜனாதிபதியும் இலங்கை ஜனாதிபதியும் பங்கேற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் நிகழ்விலேயே அவர் இந்த காலணியை அணிந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் அந்த நிகழ்வின் போது சற்று தடுமாற்றநிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.