30 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்: இரத்தவெள்ளத்தில் சடலங்கள் (வீடியோ இணைப்பு)
https://newsweligama.blogspot.com/2014/10/30.html
சிரியாவில் முப்பது பேரை கொடூரமாக சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் செயலால் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.
இந்நிலையில் சிரியாவின் சயீர் (Sayir) பகுதியிலுள்ள எண்ணைய் மற்றும் எரிவாயு கிடங்கு பகுதியில் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களை எதிர்த்தவர்களை கொல்லப் போவதாக ஒலிப்பெருக்கிகளில் அறிவித்தபடி வாகனங்களில் சென்றுள்ளனர்.
இதன்பின் அங்குள்ள பழங்குடியின பாதுகாப்பு அதிகாரிகளின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சூட்டில், சுமார் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அதி நவீன ஆயுதங்களை கொண்டு போராளிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்குதலை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.