பொதுபல சேனா அமைப்பை விட்டு விலகவில்லை - பல்டி அடித்தார் கிரம விமலஜோதி தேரர்

பொதுபல சேனா அமைப்பை விட்டு விலகவில்லை என கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருந்தமையினால் அமைப்பின் பணிகளில் செயற்பாட்டு ரீதியாக அண்மையில் பங்களிப்புச் செய்ய முடியவில்லை.

எனினும், அமைப்பை விட்டு நான் விலகவில்லை.

நூல் ஒன்றை மொழி பெயர்த்துக் கொண்டிருப்பதனால் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டது.

அளுத்கம சம்பவத்தின் போது இத்தனை பேர் கொல்லப்பட்டனர், இத்தனை பேர் காயமடைந்தனர். இத்தனை கடைகள் உடைக்கப்பட்டன என பொய்யான தகவல்களே எனக்கு வழங்கப்பட்டது.

நாட்டின் அமைதியை உரிய முறையில் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சமூக சாபத்திற்கு இலக்காக நேரிடும் என கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அளுத்கம சம்பவம் இடம்பெற்ற போது பொதுபல சேனாவிலிருந்து விலகிக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

உள் நாடு 7385944042145994173

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item