முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு பிணை

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரை திட்டி அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடரப்பட்ட வழக்கிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபா பிணையில் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வர்த்தக ஷியாம் கொலை வழக்கு உட்பட மேலும் இரண்டு வழக்குகளில் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related

உள் நாடு 4681414295507886640

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item