அரபு நாடுகள் எமக்கு துரோகம் இழைத்தன - ஹமாஸ்

ஹமாஸ் வெளியிட்டுள்ள செய்திகள் :

1.- பலஸ்தீன் முஜாஹித்களுடன் இணைந்து மக்களும்
வெளிப்படுத்திய உறுதி எதிரிகளை தோற்கச் செய்துள்ளது. 

2- இஸ்ரேல், 51 நாட்களாக சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட ஆயுதங்களை பாலஸ்தீன் மக்களுக்கு எதிராக செயல்படுத்தியது பாடசாலைகள், பள்ளிவாயல்கள், விளைச்சல் நிலங்கள், வீடுகள், குடியிருப்புக் கட்டிடங்கள் ... போன்ற அனைத்தின் மீதும் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியது. 2100 பேருக்கும் அதிகமானவர்கள் இறை பாதையில் கொல்லப்பட்டனர். 
11000 பேர் வரை காயப்பட்டனர். இவர்களுள் அதிகமானவர்கள் சிறுவர்கள், பெண்கள்,முதியோர்கள் ஆவர் ..

3.- இஸ்ரேலுக்கு பல நாடுகளும் உதவியளித்தன. எமது அரபு நாடுகள் எமக்குத் துரோகம் இழைத்தனர். எப்படித் தான் இருந்தாலும் போராட்டம் வெற்றியளித்தது. கஸ்ஸாமும் , ஸராயா குத்சும் சேர்ந்து போராடியது. 

4- எமது மக்களின் உறுதி இஸ்ரேலிய படையின் அதீத கற்பனைகளை தகர்த்து எறிந்தது. 

5.- இந்த வெற்றியை எங்களுக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனுக்கு நாம் சிரம் தாழ்த்துகின்றோம்
6- எங்கள் இறைவழி உயிர் நீத்தோரை (ஷுஹதாக்களை) நாம் இந்த இடத்தில் நினைவு படுத்துகின்றோம்

Related

சர்வதேசம் 155918624592577025

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item