அக்மீமன கொலைச் சந்தேக நபர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை
https://newsweligama.blogspot.com/2014/09/blog-post_19.html
காலி, அக்மீமன பகுதியில் 8 வயதான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
8 வயது சிறுமி ஒருவர் கடந்த 17ம் திகதியன்று தமது வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமையை தெரியவந்தது.
இந்தநிலையில் சந்தேகநபர் நேற்று இரவு பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்து தப்பிய நிலையில் இறுதியாக ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.