மேலும் பலமடைகின்றது மைத்திரி அணி
https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_12.html
இன்று காலை ஐந்து சு.க உறுப்பினர்கள் மைத்ரி அணியில் இணைந்துகொண்டுள்ள நிலையில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்காரவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையை விட்டுப் பிரிந்துள்ளார்.
இந்நிலையில், மேலும் சில இணைவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் மைத்ரி பிரிவு சுதந்திர கட்சி ஆளுமையைப் பெறும் அதேவேளை எதிரணி கூட்டில் இது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் உணர்வு மேலோங்கிய கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற போதும் உண்மை நிலவரம் குறித்த முழு விபரங்கள் வெளிவர மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.