பாப்பரசர் இலங்கை வந்தடைந்தார் - படங்கள்
https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_13.html
பரிசுத்த பாப்பரசர் பிரன்ஸின் சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை வந்தடைந்தார். வத்திக்கானில் இருந்து இலங்கைக்கு வந்த இத்தாலிக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலமே அவர் இலங்கை வந்தடைந்தார்.
பாப்பரசர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் வரவேற்கப்பட்டதோடு அவரை வரவேற்க சிறியதொரு வைபவமும் நடத்தப்பட்டது.
பின்னர் சுமார் 9.45 மணியளவில் அவரை கூட்டிச்செல்லும் வாகனப் பேரணி ஆரம்பமாகியது. அது பொரல்ல, மருதானை ஊடாக வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் திறந்த ஒரு வாகனத்திலேயே வருகை தர உள்ளதால் அவர் வருகையின் போது கிறிஸ்தவ மக்கள் பாதையின் இரு பக்கமும் இருந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.