எயார் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடித்தளத்தில் மோதி வெடித்து சிதறியுள்ளது

இரு வாரங்­க­ளுக்கு முன் விபத்­துக்­குள்­ளான எயார் ஏசியா கியூ.இஸட். 8501 விமானம் ஜாவா கடலின் அடித்­த­ளத்தில் மோதிய பின்னர் வெடித்துச் சித­றி­யுள்­ள­தாக மேற்­படி விமா­னத்தின் சிதை­வுகள் தொடர்­பான ஆரம்­ப­கட்ட பகுப்­பாய்­வுகள் தெரி­விப்­ப­தாக அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

இந்­தோ­னே­சிய கடற்­படையைச் சேர்ந்த நீர்மூழ்கிவீரர்கள் விமா­னி­களின் அறை ஒலிப்­ப­திவு கரு­வியை செவ்­வாய்க்­கி­ழமை கட­லி­லி­ருந்து வெற்­றி­க­ர­மாக மீட்­டுள்­ளனர்.

கறுப்புப் பெட்­டியின் முத­லா­வது பாக­மான விமான தரவு பதிவு கருவி மீட்­கப்­பட்­ட­தற்கு மறு­நாளே இந்த கருவி மீட்கப்பட்டுள்ளது.

எயார் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்­தோ­னே­சிய சுர­பயா நக­ரி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு 162 பேருடன் பய­ணித்த வேளை காணாமல் போயி­ருந்­தது.
மேற்­படி விமா­னத்தில் பயணம் செய்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளது 48 சட­லங்கள் மட்­டுமே இது­வரை மீட்­கப்­பட்­டுள்­ளன. ஏனைய சட­லங்கள் கடலின் அடித்தளத்தில் விமா­னத்தின் பிர­தான உடல் பகு­திக்குள் சிக்­கி­யுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

கடந்த வாரம் விமா­னத்தின் வால் பகுதி கண்டு பிடிக்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து சுமார் 1.5 கிலோ­மீற்றர் தொலைவில் விமா­னத்தின் பிர­தான உடல் பகுதி உள்­ளது.
மேற்­படி விமா­னத்தின் பிர­தான உடல் பகு­தியை கண்டு பிடித்து மீட்­ப­தற்கு இது­வரை திட்டம் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என இந்­தோ­னே­சிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலை­யத்தைச் சேர்ந்த எஸ்.பி.சுப்­பி­ரி­யடி தெரி­வித்தார்.

விமா­னத்தின் ஒலிப்­ப­திவு கருவி கடலின் கீழ் சுமார் 30 மீற்றர் ஆழத்தில் விமா­னத்தின் கன­மான இறக்கை பாகமொன்றின் கீழி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளது.

இந்த கண்­டு­பி­டிப்­பா­னது எயார் ஏசியா விமானம் எவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­னது என்­பதை கண்­ட­றிய உதவும் எனக் கூறப்­ப­டு­கி­றது.

தற்போது அந்த உபகரணம் ஜாவா கடலிலிலுள்ள இந்தோனேசிய பண்டா ஏக் போர்க் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி யொருவர் கூறினார்.

Related

சர்வதேசம் 2284813853740227492

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item