தனியார் தாதியர் பயிற்சி நிலைய யுவதிகள் துஷ்பிரயோகம்: இருவர் பொலிஸாரால் கைது

பொலன்னறுவை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் பயிற்சி நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இரு யுவதிகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் இணைப்பாளர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

கடந்த இரண்டாம் திகதி மற்றும் பிறிதொரு தினத்திலேயே இந்த யுவதிகள் இவர்களால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

18 வயதான இரு யுவதிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

உள் நாடு 6958093027412487119

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item