பசில், நாமல் மற்றும் கப்ரால் சம்பந்தமாக ஜே.வி.பி ஊழல் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு
https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_29.html
இன்று மக்கள் விடுதலை முன்னனியின் ஊடகவியலாளர் மா நாடொன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அனுர குமார திஸ்ஸானாயக்க தற்போதைய அரசாங்கத்தின் 100 வேலைத்திட்டத்திற்கு எவ்வாறு ஒத்துழைப்பது என்பது பற்றி விளக்கியுள்ளார்.
அதன் போது கருத்துத் தெரிவித்த திஸ்ஸானாயக்க அவர்கள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கெதிராக நாளை ஊழல் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.