கொள்ளுப்பிட்டியில் உள்ள உல்லாச ஹோட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட 7 தாய்லாந்து யுவதிகள் கைது
https://newsweligama.blogspot.com/2014/09/7.html
கொள்ளுப்பிட்டியில் உள்ள உல்லாச ஹோட்டல் ஒன்றின் மூன்றாம் மாடியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்து ஏழு தாய்லாந்து யுவதிகள் உட்பட 9 பேரை கைது செய்ததாக பாணந்துறை வலான மோசடி ஒழிப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். கடந்த 15ஆம் திகதி நள்ளிரவு சுற்றி வலைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாய்லாந்து யுவதிகளுடன் கைது செய்யப்பட்ட உள்நாட்டு ஆணும் பெண்ணும் அந்த நிலைய முகாமையாளர்களாக கடமையாற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மசாஜ் செய்து கொள்வதற்காக இந்த நிலையத்தில் 8,500ரூபா அறவிடப்படுவதாகவும் தாய்லாந்து யுவதியொருவருடன் உல்லாசம் அனுபவிக்க 5000 ரூபா அறவிடப்படுவதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவையையடுத்து தாய்வாந்து யுவதிகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய்லாந்து யுவதிகளுக்கு இந்நாட்டில் தங்கியிருக்க விசா காலம் முடிவடைந்திருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். - Metro