இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது முறுகல்! இரண்டு பேர் காயம்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_547.html
நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மைதானத்துக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைய முற்பட்டபோதே இந்த நிலை ஏற்பட்டது.
இதில் பெரும்பாலானோர் சுவர்களில் ஏறி பார்வையாளர் அரங்குக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். இதன்போது இரண்டு பேர் காயமடைந்தனர்.
இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்ட போதும் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையாக வெளியில் நின்றனர்.
டிக்கெட் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அத்துமீறி செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூடுதல் பொலிஸார் அங்கு வரழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.