தமக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன: ஜே.வி.பி குற்றச்சாட்டு

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சியை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தமது அலுவலகங்கள் மீது இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

கட்சியின் அலுவலகங்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் ஜே.வி.பி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளில் ஜே.வி.பியை இலக்கு வைத்தே ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மொனராகலை படால்கும்புர பிரதேசத்தில் அண்மையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் ஜே.வி.பியினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதில் சிலர் காயமடைந்ததுடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையும் சேதமாக்கப்பட்டது.

Related

உள் நாடு 382712413259456375

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item